ஈரான் மக்களின் நம்பிக்கை நாயகனாக வலம்வந்த காசிம் சுலைமானியை அமெரிக்கா கொலை செய்த விவகாரம் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுலைமானி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
ஈரான் மக்களின் நம்பிக்கை ஒளியாகத் திகழ்ந்த காசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் ஈராக்கில் வைத்து கொலை செய்தது. காசிம் சுலைமானியின் இறப்புச் செய்தியை ஏற்க முடியாத ஈரான் மக்கள் அவரது உடலைப் பார்க்கக் குவிந்தனர்.