சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, காவலருக்கு கடும்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போலீசுக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் தனிப்பிரிவு போலீசாக பணியாற்றி வந்தவர் சரவணன். இவர் கடந்த 2018 ஜனவரி 23ஆம் தேதி, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 22 மாதங்கள் நீடித்த வழக்கு விசாரணை அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து, இவ்வழக்கிவ், மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தார்.
அவர தமது தீர்ப்பில், "காவலர் சரவணன் மீதான குற்றச்சாட்டு, வழக்கின் விசாரணையில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றத்துக்காக, சரவணனுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஒன்பது ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது " என நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.